பதிவு செய்த நாள்
25 ஜன2017
23:37
புதுடில்லி : ‘மத்திய பட்ஜெட்டில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம்’ என, தொழில் துறை வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும், கையடக்க மின்னணு பணப் பரிவர்த்தனை சாதனங்களின் தேவை அதிகரித்துள்ளது. சிறிய வியாபாரிகள் கூட, இந்த சாதனத்தை வாங்கி, வாடிக்கையாளர்களின், ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகள் மூலம், விற்பனை பொருளுக்கு பணம் பெறுகின்றனர்.கிராமப்புறங்களில், ‘மைக்ரோ ஏ.டி.எம்.,’ எனப்படும், சிறிய அளவில், ரொக்கம் பெற உதவும் சாதனங்களை நிறுவுவது அதிகரித்துள்ளது.இந்த சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, மார்ச் இறுதி வரை, கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது, பட்ஜெட்டில் மேலும் நீட்டிக்கப்படும் என, தெரிகிறது. இந்த சாதனங்களை தயாரிப்பதற்கான பெரும்பான்மையான உபகரணங்கள், இறக்குமதியை சார்ந்துள்ளதால், அவற்றுக்கான சுங்க வரி மேலும் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், கைவிரல் ரேகை படிப்பான்கள், உயிரிதொழில்நுட்பம், தனி அடையாள குறியீட்டு அட்டைகள் ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கும், கலால் வரி விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|