பதிவு செய்த நாள்
27 ஜன2017
04:21
புதுடில்லி : பார்தி ஏர்டெல், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 503.70 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,108.10 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் வருவாய், 3 சதவீதம் குறைந்து, 23 ஆயிரத்து, 363.90 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் ஜியோ, ‘4ஜி’ சேவையை துவக்கியுள்ளது. வாடிக்கையாளரை கவரும் வகையில், அந்நிறுவனம், கட்டணமில்லா அறிமுக சேவையை வழங்கி வருகிறது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் சரிவடைந்து உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின், தொலைத் தொடர்பு துறையில், ஏர்டெல் பெரிய நிறுவனமாக திகழ்கிறது. மத்திய அரசின், செல்லாத நோட்டு அறிவிப்பால் பணப்புழக்கம் குறைந்தது; மொபைல் சந்தையில், புதிய நிறுவனம் நுழைந்தது போன்ற காரணங்களால், கடந்த காலாண்டில், எங்கள் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|