பதிவு செய்த நாள்
27 ஜன2017
04:22
புதுடில்லி : பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மக்களின் ஆரோக்கிய பராமரிப்பு செலவை குறைக்க, முன்னுரிமை அளிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதையொட்டி, அவர், நோய் சிகிச்சை மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிட்டு உள்ளார்.
இதனால், அமெரிக்காவிற்கு அதிக விலையில் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படும். அதே சமயம், குறைந்த விலையில், மூல மருந்துகளை ஏற்று மதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு, பெரியளவில் பாதிப்பு இருக்காது. மேலும், நியாயமான விலையில் இறக்குமதியாகும், புதுமையான மருந்துகளுக்கு, டிரம்ப் ஆதரவளிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இவ்வகை மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது; அந்நிறுவனங்களின் ஏற்றுமதி உயரும். அமெரிக்காவில் விற்கப்படும், ‘பிராண்டு’ மருந்துகளின் விலையில், பத்தில் ஒரு பங்கு விலையில், இந்தியாவின் மூல மருந்துகள் விற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|