பதிவு செய்த நாள்
27 ஜன2017
04:24
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, தொழில் துறை குறித்த ஆய்வறிக்கை விபரம்: நடப்பு ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், தயாரிப்பு துறையின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என, அத்துறை சார்ந்த, 1,221 நிறுவனங்களிடம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்ததால், தயாரிப்பு மந்தமடைந்துள்ளதாக, பெரும்பான்மையான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மூலப்பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால், அவற்றின் லாப வரம்பு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், நிலுவையில் உள்ள ஆர்டர்கள், ஏற்றுமதி ஆகியவை, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த அளவில், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், தயாரிப்பு துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மந்தமாகவே இருக்கும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|