பதிவு செய்த நாள்
27 ஜன2017
04:26
புதுடில்லி : மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு அமைச்சகம், நுகர்வோர் நலனை பாதுகாக்கும் நோக்கில், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு என, பிரத்யேக விதிமுறைகளை வெளியிட உள்ளது.
இது குறித்து, அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க, தனி அமைப்போ அல்லது குறிப்பிட்ட விதிமுறைகளோ இல்லை.ரிசர்வ் வங்கி சட்டம், ஐ.டி., சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தான், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும், வங்கி, காப்பீடு, தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளில், நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, குறை தீர்ப்பு மையம் அல்லது மத்தியஸ்த மையம் எதுவுமில்லை.
அது போல, மின்னணு பணப் பரிவர்த்தனையில், வணிகர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் பொறுப்பும் வரையறுக்கப்படவில்லை. எனவே, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு என, விதிமுறைகளை உருவாக்கும் பணியில், அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான வரைவு விதிமுறைகள், பொதுமக்களின் கருத்து கேட்புக்காக, வலைதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|