பதிவு செய்த நாள்
27 ஜன2017
10:12
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜனவரி 27) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. நேற்று விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ள பங்குச்சந்தைகள், பிப்ரவரி மாத வர்த்தகத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கி .ள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 147.57 புள்ளிகள் உயர்ந்து 27,855.71 புள்ளிகளாகவம், நிப்டி 40.75 புள்ளிகள் உயர்ந்த 8643.50 புள்ளிகளாகவும் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்துறை, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்துள்ளதே இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பிற ஆசிய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தை பொது விடுமுறை காரணமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|