பதிவு செய்த நாள்
27 ஜன2017
12:10
புதுடில்லி : நவம்பர் 8ம் தேதிக்கு முன் அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட முடியாது என ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து உள்ளது.
வாபஸ்:
கறுப்பு பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவ., 8ம் தேதி மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதற்கு பதிலாக புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன.
கடிதம்:
இந்நிலையில் நவ.,8 க்கு முன் அச்சான புதிய நோட்டுகளின் எண்ணிக்கை குறித்து தகவல் தெரிவிக்கும் படி ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இக்கடிதத்தை ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரத் ரிசர்வ் வங்கி நோட்டு (பி) லிமிடெட் நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ., அனுப்பி இருந்தது.
தகவல் தர மறுப்பு:
கடிதத்தை பரிசீலித்த பெங்களூருவில் இயங்கி வரும் அந்நிறுவனம், ‛இத்தகவல் நாட்டின் பொருளாதார நலன்களை பாதிக்கும். தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 8(1)(ஏ)-ன் படி இத்தகவலை வெளியிட முடியாது' என மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|