பதிவு செய்த நாள்
27 ஜன2017
14:24
தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில், தொடரும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல் விலையும் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைத்துள்ளனார்.
தமிழகத்தின், மொத்த நிலப்பரப்பில் வெறும், 5 சதவீதம் மட்டுமே, கால்நடைகளுக்கான தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.அதனால், விவசாய சாகுபடி பயிர்களில் கிடைக்கும் வைக்கோல், விளை நிலங்கள், தரிசு நிலங்களில் இருக்கும் புற்களை நம்பியே, கால்நடை வளர்ப்புத் தொழில் இருக்கிறது. தற்போது, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்கள், கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேய்ச்சல் நிலங்கள் பாலைவனம் போல இருப்பதால், கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் தவிக்கின்றன. பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் தான், பெரும்பாலான விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம். தற்போது, தண்ணீர் பற்றாக்குறை, தீவன பற்றாக்குறையால், கால்நடைகளுக்கு தொற்றுநோய், வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது. அதனால், விவசாயிகள் கால் நடைகளை வளர்க்கவும் முடியாமல், விற்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில், இந்தாண்டு சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்துவிட்டன. தண்ணீர் பற்றாக்குறையால், பல இடங்களில் பயிர்கள் முழுமையாக வளராமல் வீணாகி விட்டன.
தற்போது, பம்புசெட் மூலம் அறுவடை செய்யப்படும் பகுதிகளில், வைக்கோலுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. சாகுபடி அதிகம் இல்லாததால், கால்நடைக்கு தேவையான வைக்கோல் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வைக்கோல் கிடைத்தாலும், ஒரு ஏக்கர் வைக்கோல் விலை, 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்போர், அதிக விலைக்கு வைக்கோல் வாங்க முடியாமல், தடுமாறி வருகின்றனர்.
வருகைதற்போது டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை நடந்து வரும் நிலையில், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலுார் மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து, கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்க கால்நடை வளர்போர், வியாபாரிகள் என, குவிந்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|