அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய சுவைக்கான உணவகம் திறப்புஅமெரிக்காவில் இந்திய பாரம்பரிய சுவைக்கான உணவகம் திறப்பு ... பட்டாசு 'ஆப்-சீசன்' உற்பத்தியில் மந்தம் பட்டாசு 'ஆப்-சீசன்' உற்பத்தியில் மந்தம் ...
வறட்சியால் தீவன தட்டுப்பாடு வைக்கோல் விலை ரூ.2,000
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
14:24

தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில், தொடரும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல் விலையும் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைத்துள்ளனார்.

தமிழகத்தின், மொத்த நிலப்பரப்பில் வெறும், 5 சதவீதம் மட்டுமே, கால்நடைகளுக்கான தீவனப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.அதனால், விவசாய சாகுபடி பயிர்களில் கிடைக்கும் வைக்கோல், விளை நிலங்கள், தரிசு நிலங்களில் இருக்கும் புற்களை நம்பியே, கால்நடை வளர்ப்புத் தொழில் இருக்கிறது. தற்போது, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்கள், கண்மாய்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேய்ச்சல் நிலங்கள் பாலைவனம் போல இருப்பதால், கால்நடைகள் தீவனம் கிடைக்காமல் தவிக்கின்றன. பால் உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் தான், பெரும்பாலான விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம். தற்போது, தண்ணீர் பற்றாக்குறை, தீவன பற்றாக்குறையால், கால்நடைகளுக்கு தொற்றுநோய், வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறது. அதனால், விவசாயிகள் கால் நடைகளை வளர்க்கவும் முடியாமல், விற்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில், இந்தாண்டு சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்துவிட்டன. தண்ணீர் பற்றாக்குறையால், பல இடங்களில் பயிர்கள் முழுமையாக வளராமல் வீணாகி விட்டன.

தற்போது, பம்புசெட் மூலம் அறுவடை செய்யப்படும் பகுதிகளில், வைக்கோலுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. சாகுபடி அதிகம் இல்லாததால், கால்நடைக்கு தேவையான வைக்கோல் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வைக்கோல் கிடைத்தாலும், ஒரு ஏக்கர் வைக்கோல் விலை, 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்போர், அதிக விலைக்கு வைக்கோல் வாங்க முடியாமல், தடுமாறி வருகின்றனர்.

வருகைதற்போது டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை நடந்து வரும் நிலையில், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலுார் மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து, கால்நடைகளுக்கு வைக்கோல் வாங்க கால்நடை வளர்போர், வியாபாரிகள் என, குவிந்து வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)