பதிவு செய்த நாள்
30 ஜன2017
04:41
முதலீடு என்பது, சிக்கலானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்தும், ஜே.எல்.காலின்ஸ், செல்வ வளம் பெறுவதற்கான எளிய வழிகளை, ‘தி சிம்பிள் பாத் டு வெல்த்’ புத்தகத்தில் விவரித்துள்ளார்.
இந்த புத்தகத்தின் அறிமுக பகுதியில், செல்வத்திற்கான அடிப்படை அம்சங்களை, அவர் குறிப்பிடுகிறார்:இந்த சிக்கலான உலகில் வாழ, நாம் உருவாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாக, பணம் இருப்பதால், அதை புரிந்து கொள்வது முக்கியம். பணத்திற்கு எஜமானராக இருக்க முடிந்தால், அது விசுவாசமான சேவகனாக இருக்கும்; இல்லையென்றால், அது நமக்கு எஜமானராகி விடும்.‘ஆனால், பணம் முக்கியமானது தான். எனினும், நான் அதையே நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை’ என, என் மகள் ஒரு முறை கூறினாள். இது சரியானது தான். பணத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதை விட, பாலங்கள் கட்டுவது, நோய்களை குணமாக்குவது என, பலருக்கும் முக்கியமான பணிகள் இருக்கின்றன.
ஆனால், பணம் தொடர்பான விஷயங்களை அலட்சியம் செய்தால், நிதித் துறை, மந்திரவாதிகளிடம் சிக்கி கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் முதலீட்டை, சிக்கலானதாக மாற்றி விடுவர்.முதலீடு என்பது, சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை; அது அவசியமும் இல்லை; அதனால் பயனுமில்லை. வாழ்க்கையில் சில அடிப்படையான விஷயங்களை, நினைவில் கொள்ள வேண்டும்.நீங்கள் சம்பாதிப்பதை விட, குறைவாக செலவு செய்யுங்கள்; உபரி யானதை முதலீடு செய்யுங்கள்; கடன் பெறுவதை தவிர்க்கவும். இதை மட்டும் செய்து வந்தால், நீங்கள் எல்லா விதங்களிலும் வளம் பெறலாம். கடன் சுமையில் இருந்து விடுபடுவது, மிகவும் முக்கியம்.
உங்கள் வருவாய்க்கு ஈடாக, வாழ்க்கை முறை இருந்தால், நீங்கள் ஒரு, நிதி அடிமை போல தான். நிதி நோக்கில் பொறுப்பற்றவர்களுடன் பழகுவதை தவிருங்கள். பணத்தால் எதையும் வாங்க முடியும். ஆனால், நிதி சுதந்திரத்தை அல்ல என்பதை உணரவும்.வாழ்க்கை தேர்வுகள் என்பது, எப்போதும் பணத்தை அடிப்படையாக கொண்டதல்ல என்றாலும், எந்த முடிவை மேற்கொண்டாலும், அதன் நிதி தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ளுங்கள்.நல்ல முதலீடு என்பது, சிக்கலானது அல்ல. நீங்கள் சம்பாதிக்கும், ஒவ்வொரு ரூபாய் மற்றும் உங்களை நாடி வரும் ஒவ்வொரு ரூபாயிலும், ஒரு பகுதியை சேமிக்கவும். நீங்கள் எந்தளவு அதிகமாக சேமித்து முதலீடு செய்கின்றீரோ, அந்த அளவுக்கு வளம் உருவாகும். உங்கள் வருவாயில், 50 சதவீதத்திற்கும் மேல் சேமித்து, முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள். கடன் இல்லாமல் இருந்தால், இது சாத்தியம் தான்.
அதிகமாக சேமிப்பதன் மூலம், வருவாய்க்குள் வாழ்க்கை நடத்த கற்றுக் கொள்வதுடன், முதலீடு செய்யவும் அதிகம் வாய்ப்பு இருக்கும். பங்குச்சந்தை முதலீடு, அதிக பலனளிக்கும். ஆனால், சந்தை ஏற்ற, இறக்கங்களை கொண்டது என, அறியவும்.உங்கள் முதலீட்டின், 4 சதவீத வருவாயில், உங்களால் வாழ்க்கை நடத்த முடியும் என்றால், நீங்கள் நிதி சுதந்திரம் பெற்று விட்டதாக கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|