தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு ... ஜப்­பா­னின் டொயொட்டா நிறு­வ­னம் ஓராண்­டில் 1.02 கோடி கார்­கள் விற்­பனை ஜப்­பா­னின் டொயொட்டா நிறு­வ­னம் ஓராண்­டில் 1.02 கோடி கார்­கள் விற்­பனை ...
ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
17:50

புதுடில்லி: ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க இதுவரை இருந்த உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. பிப்., 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. பழைய, 500 மற்றும், 1000 ரூபாயை வாபஸ் பெறுவதாக, நவ., 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு, வங்கி கணக்குகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.,களில் முதலில் ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் இது, 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஜன., 1 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடித்தது.
இந்த சூழ்நிலையில், பிப்., 1 முதல் ஏ.டி.எம்.,களில் தற்போது உள்ள உச்சவரம்பான, 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவு நீக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை அவர்களை விதித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)