பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:39
புதுடில்லி : பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – ஜன., 20 வரையில், பல நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை, 14 முறை வெளியிட்டு, 29,212 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கொசமட்டம் பைனான்ஸ் நிறுவனம், மூன்று முறை, பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொண்டது. திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன், முத்துாட் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள், தலா, இரு முறை, பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.
இதில், திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், 14 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இந்தியா புல்ஸ் நிறுவனம், 7,000 கோடி ரூபாய்; ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், 3,504 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவும், பழைய கடன்களை திரும்பச் செலுத்தவும், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்கவும், நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|