பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:40
புதுடில்லி : தொலை தொடர்பு துறையில், முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான, வோடபோன் இந்தியா நிறுவனம், ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணையும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றின் போட்டியை சமாளிக்க, இத்தகைய முயற்சியில், வோடபோன் நிறுவனம் இறங்கி இருப்பதாக தெரிகிறது.‘வோடபோன் இந்தியா நிறுவனம், தன் அனைத்து பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைப்பது குறித்து, பேச்சு நடத்தி வருகிறது’ என, அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இணைப்பு குறித்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறது, வோடபோன்.இணைப்பு பற்றிய தகவலை வோடபோன் தெரிவித்தாலும், எவ்வளவு தொகை மதிப்பில், இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் எதுவுமில்லை.
பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, இந்தியாவில், 26.34 கோடி வாடிக்கையாளர்களும், வோடபோன் நிறுவனத்திற்கு, 18.77 கோடி வாடிக்கையாளர்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு, 18.77 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.பார்தி ஏர்டெல், 32.84 சதவீத சந்தை பங்களிப்புடன், முதலிடத்தில் இருந்தாலும், வோடபோன் – ஐடியா இணைந்தால், அவை, 43 சதவீத பங்களிப்பை பெற்று, ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிடும்.அப்படி, வோடபோன் நிறுவனமும், ஐடியா செல்லுலாரும் இணையும் இந்த மெகா டீல் வெற்றிகரமாக முடிந்தால், அது இந்திய தொலை தொடர்பு துறையில், பல மாற்றங்கள் உருவாக காரணமாக அமையும் என, எதிர்பார்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|