பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:41
புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ மூலம், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு, ‘மொபைல் வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பைகள் பயன்படுகின்றன.‘பேடிஎம், மொபிகுவிக், பேயுமணி’ போன்ற, 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இத்தகைய மின்னணு பணப் பை சேவைகளை வழங்கி வருகின்றன.
மின்னணு பணப் பை பரிவர்த்தனையின் போது, கம்ப்யூட்டர் நாசகாரர்களால் பணத்தை பறிகொடுப்போருக்கு, காப்பீட்டு வசதி வழங்க வேண்டும் என, இத்துறை நிறுவனங்களை, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு பணப் பை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றிடம், பல கட்டங்களாக பேச்சு நடத்தியுள்ளது.
‘விரைவில், மின்னணு பணப் பையில், வாடிக்கையாளர் கணக்கில் உள்ள தொகைக்கு, காப்பீடு வசதி கிடைக்கும்; இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டதும், அரசாணை வெளியிடப்படும்’ என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|