பதிவு செய்த நாள்
31 ஜன2017
04:42
மெல்போர்ன் : இந்தியாவில், மின்னணு பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருவதால், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ நிறுவனமான, மாஸ்டர் கார்டு, மேலும் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான, சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர், சாம் அகமது கூறியதாவது:மத்திய அரசு, ரொக்கப் பயன்பாட்டை குறைத்து, மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் மேலும் அதிகளவில் முதலீடு செய்ய, நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், நிறுவனம், இந்தியாவில் மேற்கொண்ட முதலீடுகளை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொபைல் போன் பயன்பாடு பெருகி வருவதன் காரணமாக, மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு, சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது. இதற்கு, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் ஊக்கமளித்து வருகின்றன. முக அடையாளம், கைவிரல் ரேகை, மின்னணு பணப் பை போன்ற புதிய தொழில்நுட்பங்களில், வலைதளம் சார்ந்த பணப் பரிவர்த்தனைகளை, இந்தியாவில் அறிமுகப்படுத்த, நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, திரைப்பட வெளியீட்டு விழா, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் விளம்பரங்களில் பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|