பதிவு செய்த நாள்
31 ஜன2017
17:36
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாகவும், நடப்பு பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கி சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 193.60 புள்ளிகள் சரிந்து 27,655.96-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 71.45 புள்ளிகள் சரிந்து 8,561.30-ஆகவும் முடிந்தன.
ஹெச்1-பி விசா தொடர்பாக அமெரிக்கா எடுக்கவுள்ள புதிய கொள்கை காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் ஐடி தொடர்பான பங்குகளான இன்போசிஸ், டிசிஎஸ்., விப்ரோ போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|