பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:33
புதுடில்லி : போர்டு நிறுவனம், காரில் பயணிக்கும் போது, குரல் வழி உத்தரவு மூலம், பல சேவைகளை பெறும், ‘சிங்க்’ எனும் நவீன தொழில்நுட்ப சாதனத்தை, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.
முதற்கட்டமாக, போர்டு எண்டோவர் சொகுசு கார்களில், இந்த சாதனம் பொருத்தப்பட உள்ளது. இச்சாதனம், 8 அங்குல தொடுதிரையுடன், பார்ப்பதற்கு ஸ்மார்ட் போன் போல் இருக்கும். காரில் செல்லும் போது, இந்த சாதனத்துடன், ஸ்மார்ட் போனில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குறுஞ்செய்தி, அழைப்புகள், பாடல்கள் உள்ளிட்ட சேவைகளை, குரல் உத்தரவு மூலமாகவே பெறலாம். இதனால், காரில் பயணிக்கும் போது, எந்தவொரு கவனச் சிதறலும் இல்லாமல் செல்லலாம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர், அனுராக் மெக்ரோத்ரா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்,’’ என்றார்.
காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால், இந்த ‘சிங்க்’ தானாகவே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் அனுப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|