பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:34
சென்னை : சென்னையில், பல்வேறு வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு வந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, செய்தியாளர்களிடம் பேசியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு, தற்போது, 85 – 90 சதவீதம் குறைந்துள்ளது. வங்கி, ஏ.டி.எம்.,மில், ஒருவர், சராசரியாக, 3,000 ரூபாய் வரை பணம் எடுப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான போது, மக்களிடம், தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து போதுமான பணம் எடுக்க முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டது.
அதனால், அதிகளவில் பணம் எடுக்க முயன்றனர். தற்போது, நிலைமை மாறி வருகிறது. எப்போது வேண்டுமென்றாலும், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கலாம் என்பதால், அவ்வப்போது, தங்கள் தேவைக்கு ஏற்ப, பணம் எடுத்து வருகின்றனர். இம்மாத இறுதிக்குள், பணத் தட்டுப்பாடு பிரச்னை முற்றிலும் சீரடைந்து, இயல்பு நிலை திரும்பி விடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|