பதிவு செய்த நாள்
01 பிப்2017
04:37
புதுடில்லி : ‘‘இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும் போது, கிடங்கு துறை, சிறப்பான பயன்களை பெறும்,’’ என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர் நிக்லேஷ் ஜா தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது: சரக்குகளை கையாள்வது, சரக்கு போக்கு வரத்து போன்றவற்றில், தற்போது பலதரப்பட்ட வரி பிரச்னைகள் உள்ளன. இது, சரக்குகளை பாதுகாப்பாக வைக்கும் கிடங்கு துறையின் வளர்ச்சியில், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்குக்கெல்லாம் தீர்வு காணும் விதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் அமையும். பலமுனை வரிகளை நீக்கி, நாடு முழுவதும், ஒரே சீரான வரிவிதிப்பு நடைமுறைக்கு வருவதன் மூலம், கிடங்கு துறை, அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும்.
சரக்கு போக்குவரத்து, கிடங்கு பயன்பாடு ஆகியவை தொடர்பான மறைமுக வரிகள் உள்ளிட்ட, பல தரப்பட்ட பிரச்னைகளுக்கு, ஜி.எஸ்.டி., முடிவு கட்டும். குறிப்பாக, கிடங்கு துறை, புதிய பரிணாமத்தை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, நவீன தொழில்நுட்பத்தில் கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகளை அமைக்கும். குறிப்பாக, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் போன்ற மலைப் பிரதேசங்களில், கிடங்குகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். வடகிழக்கு பிராந்தியம் முழுவதிலும், வேளாண் பொருட்களை பாதுகாக்கவும், பழங்கள், காய்கறிகள் ஆகியவை வீணாவதை குறைக்கவும், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.-ஹர்பிரித் சிங், இயக்குனர், மத்திய கிடங்கு கழகம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|