வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பட்ஜெட் எதிரொலி : பங்குச்சந்தைகள் விர்ர்ர்....
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 பிப்2017
14:21

மும்பை : மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்படுகின்றன. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பிலேயே இன்றைய வர்த்தகம் துவங்கும் போது சிறிய ஏற்றத்துடன் ஆரம்பமாகின.
தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகளால் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருப்பதாலும், வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாததாலும் மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
அதிலும் வங்கி தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இதனால் நண்பகல் 2 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 401.43 புள்ளிகள் உயர்ந்து 28,057.41-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 109 புள்ளிகள் உயர்ந்து 8,670.30-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 485.68 புள்ளிகள் உயர்ந்து 28,141.64-ஆகவும், நிப்டி 155.10 புள்ளிகள் உயர்ந்து 8,716.40-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 01,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் பிப்ரவரி 01,2017
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு பிப்ரவரி 01,2017
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் பிப்ரவரி 01,2017
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!