பதிவு செய்த நாள்
01 பிப்2017
15:06

புதுடடில்லி : 2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பல்வேறு விதமான பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பான புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பான விலை அதிகரிக்க இருக்கிறது.
பான்மசாலா பொருட்களுக்கு கலால் வரி 6 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேப்போன்று புகையிலைக்கு கலால் வரி 4.2 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை கலந்த பான் மசாலாவாக இருந்தால் அதற்கான கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேப்போன்று பில்டர் அல்லாத சிகரெட்டுகள் 65மிமீ-க்குள் இருந்தால், ஆயிரம் சிகரெட்டுகளுக்கு ரூ.311 கலால் வரி விதிக்கப்படும். முன்னதாக இது ரூ.215-ஆக இருந்தது.
சுருட்டு மற்றும் பீடிக்கான கலால் வரியும் சிறிது உயர்ந்துள்ளது. 1000 சுருட்டு அல்லது பீடிக்கான கலால் வரி இனிமேல் 12.5 சதவீதம் அல்லது ரூ.4,006, இதில் எது அதிகமோ, அந்த வரி விதிக்கப்படும். முன்னதாக இது 12.5 சதவீதம் அல்லது ரூ.3,755-ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|