பதிவு செய்த நாள்
03 பிப்2017
23:53
புதுடில்லி : கடந்த, 2016 நவம்பரில், தொலை தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை, 2.10 கோடி அதிகரித்து, 112 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அக்டோபரில், ௧௧௦ கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை, 108 கோடியிலிருந்து, 1௧0 கோடியாக அதிகரித்துள்ளது.இதில், ரிலையன்ஸ் ஜியோ மட்டும், 1.62 கோடி சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. இந்நிறுவனம், ‘4ஜி’ சேவையை துவங்கிய மூன்று மாதங்களுக்குள், 5.19 கோடி சந்தாதாரர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில், ஐடியா செல்லுலார், 25 லட்சம்; பார்தி ஏர்டெல், 10 லட்சம்; வோடபோன், 8.90 லட்சம்; பி.எஸ்.என்.எல்., 8.31 லட்சம்; டெலினார், 4.86 லட்சம்; ஏர்செல், 3.02 லட்சம்; ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், 1.56 லட்சம்; எம்.டி.என்.எல்., 3,364 என்ற அளவில், சந்தாதாரர்களை இணைத்துள்ளன.குவாட்ரன்ட், தன் தொலைத் தொடர்பு சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதால், 69 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. சிஸ்டமா சியாம், 2.88 லட்சம்; டாட்டா டெலிசர்வீசஸ், 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|