பதிவு செய்த நாள்
05 பிப்2017
04:33
புதுடில்லி:இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய், 8.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் பார்லிமென்டில் கூறியதாவது:உலகின், 86 நாடுகளில் உள்ள, 200 நகரங்களில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம், 37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2019ல், 43 லட்சமாக அதிகரிக்கும் என, தெரிகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய், 8.40 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், அந்த துறையின் மூலம், இரண்டு லட்சம் பேர், நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள். கடந்த ஆண்டில், உள்நாட்டில், 72 மொபைல் போன் நிறுவனங்கள், புதிதாக ஆலை அமைத்துள்ளன. அதில், 42 நிறுவனங்கள், மொபைல் போன் உற்பத்தியும்; 30 ஆலைகள், மொபைல் உதிரிபாக உற்பத்தியும் செய்யக் கூடியவை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|