பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:08
ஐதராபாத் : ‘‘தெலுங்கானாவில், தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுகிறது,’’ என, அம்மாநில கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார்.
தெலுங்கானாவில், தொழில் துறை குறித்த கருத்தரங்கு நடந்து வருகிறது. அதில் பங்கேற்ற, கவர்னர் நரசிம்மன் பேசுகையில், ‘‘தெலுங்கானாவில், தொழில் துவங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பலரும், தொழில்களை துவக்கி வருகின்றனர்,’’ என்றார்.
தெலுங்கானா தொழில் துறை அமைச்சர் ராம ராவ் கூறியதாவது:எங்கள் மாநிலத்தில், தொழில் துவங்க, உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதனால், பலர், தொழிற்சாலைகளை அமைக்க முன்வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ துறையில், தெலுங்கானா அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதற்காக, மருந்து பொருட்கள் மட்டும் உற்பத்தி செய்ய, தனி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பல நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. இதன் மூலம், பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|