பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:09
பெங்களூரு : உஜ்ஜிவன் நிறுவனம், சிறு நிதி வங்கி சேவையை, சோதனை முறையில், பெங்களூரில் துவக்கியுள்ளது.
வங்கி சாராத நிதி நிறுவனமான, உஜ்ஜிவன் பைனான்சியல் சர்வீசஸ், நிதி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சிறிய அளவிலான வங்கி சேவையில் ஈடுபடுவதற்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, பல கட்ட ஒப்புதல்களை பெற்றுள்ளது. இதையடுத்து, உஜ்ஜிவன், சோதனை முறையில், தன் வங்கி சேவையை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, ஐந்து கிளைகள் துவங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் விரும்பும் வகையில், தரமான வங்கி சேவையை அளிக்க திட்டமிட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், வங்கி துறையில் சிறப்பான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதை, எங்கள் வங்கி பயன்படுத்திக் கொள்ளும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், உஜ்ஜிவன், வங்கி துறையில் முன்னணியில் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|