பதிவு செய்த நாள்
08 பிப்2017
08:10
புதுடில்லி : சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, சுய வாகன போக்குவரத்து நவீன மயமாக்கல் திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
வாகனங்களால் உண்டாகும் காற்று மாசுவில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பங்களிப்பு, 65 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே, 2005 மார்ச், 31க்கு முந்தைய வாகனங்களை, சாலை போக்குவரத்தில் இருந்து அகற்ற, மத்திய அரசின் இந்த கொள்கை திட்டம் உதவும்.இத்திட்டத்தின் படி, நாட்டில் உள்ள, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, 2.80 கோடி வர்த்தக வாகனங்கள், படிப்படியாக, சாலை போக்குவரத்தில் இருந்து அகற்றப்படும். இதன் மூலம், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, பெருமளவு கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொள்கை திட்டம், அனைத்து மாநிலங்களின் செயலர் குழுவின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முந்தைய தன் வாகனத்தை ஒப்படைத்து, 15 லட்சம் ரூபாய்க்கு புதிய வாகனம் வாங்கினால், அவருக்கு, 5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் மன்சுக்லால் மாண்டவியா, ராஜ்யசபாவில் கூறியதாவது: பழைய வாகனங்களை அழிக்கும், சுய வாகன போக்குவரத்து நவீன மயமாக்கல் திட்டம், அனைத்து மாநில செயலர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் ஒப்புதலுக்குப் பின், உரிய நடைமுறையின்படி, திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|