பதிவு செய்த நாள்
08 பிப்2017
17:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் துவங்கி, ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தன. ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை இன்று வெளியானது. முன்னதாக அது தொடர்பான எதிர்பார்ப்பில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாதது முதலீட்டாளர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.24 புள்ளிகள் சரிந்து 28,289.92-ஆகவும், நிப்டி 0.75 புள்ளிகள் உயர்ந்து 8,769.05-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் சரிந்தும், 14 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|