இப்கோ தயா­ரிப்­பு­களை வாங்க விவ­சா­யி­க­ளுக்கு டெபிட் கார்டுஇப்கோ தயா­ரிப்­பு­களை வாங்க விவ­சா­யி­க­ளுக்கு டெபிட் கார்டு ... ‘பேராசிரியர் பணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி’; ரிசர்வ் வங்கி ‘மாஜி’ கவர்னர் ரகுராம் ராஜன் ‘பேராசிரியர் பணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி’; ரிசர்வ் வங்கி ‘மாஜி’ ... ...
முதன்­மு­றை­யாக கடன் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ஐ.டி.எப்.சி., வங்­கி­யின் புதிய வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
00:52

புதுடில்லி : முதன்முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, எளிதில் கடன் கிடைப்பதற்கு வசதியாக, ஐ.டி.எப்.சி., வங்கி, இண்டியாலெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
முதன் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு, கடன் கிடைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இதற்கு முன், அவர்கள் கடன் வாங்கியது கிடையாது என்பதால், அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில் எவ்வாறு நடந்து கொள்வர் என்பதை வங்கிகள் அறியும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால், அவர்களுக்கு கடன் வழங்க நிறுவனங்கள் தயக்கம் காட்டக்கூடும்.இந்நிலையில், இத்தகையவர்களுக்கு எளிதில் கடன் வழங்க வசதியாக, தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.டி.எப்.சி., வங்கி, நிதி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான, இண்டியாலெண்ட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது குறித்து, ஐ.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன் கடன் வாங்கியிராத மாதாந்திர சம்பளம் வாங்கும் நபர்களுக்கு, உடனடி கடன் வசதி இனி எளிதில் கிடைக்கும். இதற்காக, தனித்துவம் வாய்ந்த சேவையை இண்டியாலெண்ட்ஸ் எங்களுக்கு வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய, இண்டியாலெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், கவுரவ் சோப்ரா, ‘‘புதிய தலைமுறை நிதி நிறுவனங்களும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் அதிக பாதுகாப்பற்ற கடன் சந்தையையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அப்படிப்பட்ட சந்தையை விரிவாக்கும் வகையில், நாங்கள், ஐ.டி.எப்.சி., வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்,” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)