பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:56
கோல்கட்டா : ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்'ன் தேசிய தலைவர் கெதம்பர் ஆனந்த் கூறியதாவது: மத்திய அரசு, விரைவில், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கு பாதிப்பு இல்லாத வகையில், வரி விகிதம் இருக்கும் என, அரசு உறுதி அளித்துள்ளது. அதனால், ரியல் எஸ்டேட் துறையில், நிலம், வீடு உள்ளிட்டவற்றின் விலை உயராது.
நிலம், வீடு ஆகியவற்றை வாங்குவோரும் பாதிக்கப்பட மாட்டர். எனினும், பத்திரப் பதிவு கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் ஆகியவை, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதுதான், ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு, சரக்கு மற்றும் சேவை வரியில் தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கிறோம். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ஏற்பட்ட பாதிப்பு மறைந்து விட்டது. தற்போது, கோல்கட்டாவில், 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பி விட்டது. வீட்டு வசதி கடனுக்கான வங்கிகளின் வட்டி விகிதம், 8 சதவீதத்திற்கும் கீழாக குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|