பதிவு செய்த நாள்
09 பிப்2017
10:04
மும்பை : கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் இன்று (பிப்ரவரி 09) வுலுவான உயர்வ காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் விற்றதால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 66.95 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.19 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட புதிய பணக்கொள்கையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததும், இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் துவங்கி உள்ளதும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|