பதிவு செய்த நாள்
09 பிப்2017
16:10
வாஷிங்டன் : அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும் என சர்வதேச அமெரிக்காவின் தேசிய அறிவியல் சார் கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வலிமையை பாகிஸ்தானால் ஒப்பிட கூட முடியாது. அதே சமயம் மற்ற தொழில் துறைகளில் பாகிஸ்தான் தனது நிலைத்தன்மையை தொடர்ந்து பாதுகாக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருக்கும். அதே சமயம், மற்ற துறைகளில் ஏற்படும் உள்விவகாரங்களால் போதிய அளவு வளர்ச்சி அல்லத விரிவாக்கம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் பாகிஸ்தான் வெளிநாட்டு பங்குதாரர்களின் நட்புறவை சார்ந்து இருக்கும். தங்களின் போர் வலிமையை பெருக்குவதற்காக அணுஆயுதங்கள் மற்றும் கடல் சார்ந்த போர் கருவிகளை பாகிஸ்தான் விரிவுபடுத்திக் கொள்ளும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|