பதிவு செய்த நாள்
10 பிப்2017
03:50
மும்பை : இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தொலைத்தொடர்பு சேவையில், ‘ஏர்டெல்’ முதலிடத்திலும், ‘வோடபோன்’ இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில், ‘ஐடியா செல்லுலார்’ நிறுவனம் உள்ளது. இந்நிலையில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்தால், ஒன்றுபட்ட நிறுவனத்தின் வருவாய், 77,500 – 80 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். வரிக்கு முந்தைய லாபம், 28 சதவீதமாக இருக்கும். நிர்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் குறையும். செயல்பாட்டு லாப வரம்பு, 3 சதவீதம் உயரும். தொலைத்தொடர்பு சந்தாதாரர்களில், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் பங்களிப்பு, 37 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்து, 38 கோடியாக அதிகரிக்கும். தற்போது, 26.20 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ள ஏர்டெல், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|