பதிவு செய்த நாள்
10 பிப்2017
03:53
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பட்டு தொழிலில் நிலவும் பிரச்னைகள் குறித்து, முதலீட்டாளர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இந்தியா, பட்டு துணி உள்ளிட்ட ஜவுளி உற்பத்தியில், முன்னணியில் உள்ளது. இந்தியாவில் இருந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, அதிகளவில் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு நெசவு உள்ளிட்டவற்றில் அதிக பிரச்னைகள் நிலவுகிறது. இதனால், உரிய விலை கிடைக்காமல், தொழில் துறையினர் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, பட்டு தொழிலில் காணப்படும் சவால், அதற்கு தீர்வு காண்பது உள்ளிட்டவை குறித்து, ஜவுளி தொழில் துறையினருடன் ஆலோசிக்க, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து, மத்திய ஜவுளி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பட்டு வாரியம் சார்பில், அந்த தொழில் துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, வரும் வெள்ளிக்கிழமை, சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் ஸ்மிருதி இரானி, அரசு அதிகாரிகள் பங்கேற்று, தொழில் துறையினரின் கோரிக்கைகளை கேட்பர். கூட்டத்தில் பங்கேற்க, 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|