பதிவு செய்த நாள்
10 பிப்2017
15:58
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மறைமுக வரி மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 23.9 சதவீதமும், நேரடி வரி மூலம் கிடைத்த வருவாய் 10.79 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஜனவரி மாத இறுதி வரை நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் அரசுக்கு ரூ.12.85 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ரூ.16.99 லட்சம் கோடி வரி வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் மறைமுக வரி வசூல் சரிவடையும் என கருதப்பட்டது. ஆனால் மாறாக 16.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்த நேரடி வரி வசூல் ரூ.5.82 லட்சம் கோடியாகவும், மறைமுக வரி வசூல் ரூ.7.03 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதே போன்று தனிநபர் வருமான வரி, கலால் வரி ஆகியன மூலம் கிடைத்த வருவாயும் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் வருமான வரி 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|