பதிவு செய்த நாள்
10 பிப்2017
23:55
மும்பை : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில், பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்களின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், அடுத்த ஆறு அல்லது எட்டு மாதங்களில், பங்குகளை விற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது காப்பீட்டு துறையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 17 சதவீதம் என்றளவில் உள்ளது. பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, பங்குச் சந்தையில் நல்ல சூழல் காணப்படவில்லை. எனவே, அடுத்த ஆறு அல்லது எட்டு மாதங்களில், எங்கள் நிறுவனம் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள், வங்கிகள் மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|