பதிவு செய்த நாள்
10 பிப்2017
23:56
புதுடில்லி : ஏரிஸ் லைப்சயின்சஸ் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட, ‘செபி’ அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது.
உள்நாட்டில், மருந்து பொருட்கள் துறையில் ஏரிஸ் லைப்சயின்சஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்கு தேவைப்படும் நிதியை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, விரிவாக்க நடவடிக்கைக்காக பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, பங்கு சந்தை கட்டுப்பட்டு அமைப்பான, ‘செபி’யிடம், அனுமதி கேட்டு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீட்டு பணிகள் துவங்கும். தேசிய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை இரண்டிலுமே பங்குகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|