பதிவு செய்த நாள்
10 பிப்2017
23:57
புதுடில்லி : நடப்பாண்டில், 30 லட்சம் ஆளில்லா சிறு விமானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என, ஆராய்ச்சி நிறுவனமான, ‘கார்ட்னர்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் ஜெரால்ட் வான் ஹோய் கூறியதாவது:சர்வதேச சந்தையில், தனிப்பட்ட நபர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான, ஆளில்லா சிறு விமானங்கள் விற்பனை, இந்தாண்டு, 34 சதவீதம் அதிகரித்து, 600 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2020ல், 1,100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றை கண்காணிப்பதில், ஆளில்லா சிறு விமானங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கான, சிறு விமானங்கள், ஸ்மார்ட் போனில் உள்ள அம்சங்கள் போல், ‘செல்பி’ எடுப்பதற்கும், புதுமையான கோணங்களில் படம் பிடிக்கவும், பொழுது போக்குக்காகவும் பயன்படுகின்றன.நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகம் தொடர்பாக, இந்த சிறு விமானத்தை வாங்கி, சோதனை முறையில் உபயோகிக்கின்றன.குறைந்த விலையில், இந்த விமானங்கள் கிடைப்பதால், அவற்றுக்கான பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|