பதிவு செய்த நாள்
10 பிப்2017
23:58
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், இயக்குனர் குழுவுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, அந்நிறுவனம் மறுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக, இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், இயக்குனர் குழுவுக்கும் மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப, இன்போசிஸ் நிறுவனத்தின், முன்னாள் தலைமை நிதி அதிகாரி, டி.வி.மோகன்தாஸ் பாய், ‘இயக்குனர் குழு, எப்போதும் போல, நிறுவனத்தின் நன்மைக்காகவே நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி, மேம்போக்கான அறிக்கையை வெளியிடாமல், முழு விபரங்களையும், பங்கு முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கூறியிருந்தார். இது, இன்போசிஸ் நிறுவனத்தில் பிரச்னை எழுந்துள்ளதை ஊர்ஜிதப்படுத்தியது.
இந்நிலையில், இன்போசிஸ் தலைவர், ஆர்.சேஷசாயி வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, விஷால் சிக்காவிற்கு வழங்கும், ஊக்கத்தொகை உள்ளிட்ட ஊதியம் மற்றும் முன்னாள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை ஆகியவை குறித்து, நிறுவனர்கள் எழுப்பிய கேள்விகளையும், அளித்த ஆலோசனைகளையும் இயக்குனர் குழு பரிசீலித்து, சுயமாக, அதே சமயம் சுதந்திரமாக முடிவு எடுக்கும்.விஷால் சிக்காவின் தலைமையில், நிறுவனம் சீரிய முறையில் செயல்படுவதற்கான ஆக்கபூர்வ ஒத்துழைப்பை, இயக்குனர் குழு வழங்கும். நிறுவனர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை மறுக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதனிடையே, விஷால் சிக்கா, அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ‘தேவையற்ற பிரச்னைகளை ஒதுக்கி விட்டு, திட்டப் பணியாற்றுவதை இலக்காக கொண்டு, துடிப்புடன் செயல்படுவோம்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|