பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:38
புதுடில்லி : கடந்த ஆண்டு, நவ., 8ல், உயர் மதிப்பு கரன்சிகள் செல்லாது என, அறிவிக்கப் பட்டது. இதையடுத்து, ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாகவும், மக்களின் பயன்பாடு குறைந்ததாலும், நவ., – டிச., மாதங்களில், வாகன கடன் நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 15 நிறுவனங்களின், வர்த்தக வாகன கடன் பிரிவின் வசூல் வளர்ச்சி, 2014ல், அதிகபட்சமாக, 9 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, வாகன கடன் வசூல் வளர்ச்சி, இரு ஆண்டுகளாக குறைந்து வந்தது. இது, 2016 ஜூனில், 6.3 சதவீதமாக சரிவடைந்தது. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நிறுவனங்களின் கடன் வசூல் வளர்ச்சி, 2016 நவ., – டிச., மாதங்களில், 1.3 சதவீதமாக குறைந்தது. தற்போது, நிலைமை ஓரளவு சீரடைந்தாலும், மார்ச் இறுதி வரை, நிறுவனங்களின் வாகன கடன் வசூல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|