பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:39
புதுடில்லி : தாய்லாந்தில் முதலீடு செய்ய வருமாறு, அந்நாட்டு முதலீட்டு வாரியம், இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, தாய்லாந்து முதலீட்டு வாரியத்தின் இயக்குனர் கனோக்பார்ன் சொட்டிபால் கூறியதாவது: பெரிய தொழில் அல்லது சிறிய தொழில் என்பது, முக்கியமில்லை; இந்தியாவைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் கூட, தாய்லாந்து நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, தொழில் துவங்கலாம். வர்த்தகம், உற்பத்தி மற்றும் உயர் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில், நிறைய முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. புதுமையான தொழில்நுட்பத்துடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் தொழில் துவங்க வேண்டும்.
விமானம், ஆட்டோமேஷன், ஸ்மார்ட் எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் கூட, இந்திய நிறுவனங்கள் தொழில் துவங்க, சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.இந்தியா உட்பட, பல நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிப்., 15ல், ‘தாய்லாந்தில் முதலீட்டு வாய்ப்பு’ என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|