பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:40
லக்னோ : ‘ஆரோக்கிய பாதுகாப்பு அடிப்படையில், குளிர்பானங்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க வேண்டும்’ என, கோக கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ், குளிர்பானங்களுக்கு, 40 சதவீத வரி விதிக்க வேண்டும் என, பரிந்துரைத்து உள்ளது.இதை, மத்திய அரசு ஏற்றால், இந்தியாவில் உள்ள, சில பிரிவுகளை மூட நேரிடும் என, கோக கோலா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோக கோலா இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிரிவின் தலைவர் வெங்கடேஷ் கினி கூறியதாவது:விரைவில் அறிமுகமாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியில், குளிர்பானங்களுக்கு, ஆரோக்கிய பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், பல நிலை வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், அது, கோக கோலா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஏனெனில், நிறுவனம், சர்க்கரை அல்லது கலோரி குறைந்த குளிர்பானங்களை, சந்தையில் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு, அரசு முக்கியத்துவம் அளித்து, சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த கலோரி உள்ள குளிர்பானங்களுக்கும், அவ்வாறற்ற, பிற குளிர்பானங்களுக்கும் தனித்தனி வரி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும்.
இந்தியாவில், பழரச பானங்கள் விற்பனையில், நிறுவனம் முதலிடத்தில் உள்ளதால், இதை, பிற குளிர்பான நிறுவனங்கள் வரவேற்குமா என, தெரியாது; ஆனால், கோக கோலா வரவேற்கும். பிரிட்டனில், சாதாரண கோக கோலாவை விட, சர்க்கரை சேர்க்காத கோக் அதிகம் விற்பனையாகிறது. அது போல, இந்தியாவிலும், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|