பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:41
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான விஷால் சிக்காவுக்கு, ஊக்கச்சலுகை உள்ளிட்ட, ஆண்டு ஊதியம், 74 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இத்துடன், முன்னாள் அதிகாரிகள், ராஜிவ் பன்சால், டேவிட் கென்னடி ஆகியோருக்கும், பணி விலகலின் போது, பெருந்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு, இன்போசிஸ் நிறுவனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கும், விஷால் சிக்காவுக்கும் பனிப்போர் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், விஷால் சிக்கா, ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ‘இன்போசிஸ் நிறுவனர்களுடனான நட்புறவு மகத்தானது. அதிலும், நாராயணமூர்த்தியுடன், எனக்கு இதயபூர்வமான நட்புறவு உள்ளது. தன்னிகரற்ற அந்த மனிதரை ஆண்டுக்கு, ஐந்தாறு முறை சந்தித்து பேசுவது வழக்கம்’ என, தெரிவித்து உள்ளார்.இதனிடையே, ‘இன்போசிஸ் இயக்குனர் குழுவுடன் மோதல் எதுவுமில்லை’ என, நாராயணமூர்த்தி தெரிவித்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|