பதிவு செய்த நாள்
14 பிப்2017
17:30
புதுடில்லி : கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு நாட்டின் பணவீக்கம் 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியிருக்கிறது. அதில் பணவீக்கம் 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்திருப்பது, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் உயர்ந்தன் எதிரொலியாக பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் பணவீக்கம் 5.41 சதவீதமாக இருந்தது. அதன்பின்னர் 30 மாதங்களுக்கு பின்னர் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக 2016, டிசம்பர் மாதம் பணவீக்கம் 3.39 சதவீதமும், நவம்பர் மாதம் 3.38 சதவீதமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|