பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:26
மும்பை : தேனா வங்கியை இணைப்பது சம்பந்தமாக, எந்த பேச்சும் நடத்தப்படவில்லை என, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
தேனா வங்கியின் தலைவர் அஸ்வினி குமார், கோல்கட்டாவில், யூனியன் வங்கி தலைவரை சந்தித்து பேசியதாகவும், தேனா வங்கியையும், யூனியன் வங்கியையும் இணைப்பது குறித்து, பூர்வாங்கமான பேச்சு நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூனியன் வங்கி தலைவர் அருண் திவாரி, இணைப்பு குறித்து எந்த பேச்சும் நடக்கவில்லை என, தெரிவித்திருக்கிறார். வாராக்கடன், லாபமின்மை போன்ற காரணங்களால், பல வங்கிகள் தவித்து வந்த நிலையில், மத்திய அரசு, வங்கிகளை இணைப்பது குறித்து ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன், அதன், 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியவற்றை இணைப்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தான், தேனா வங்கி தலைவர், யூனியன் பேங்குடன் இணைப்பு குறித்து பேச்சு நடத்தியதாக தெரிவித்திருக்கிறார். இருப்பினும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர், இதை தற்போது மறுத்திருக்கிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|