பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:27
மும்பை : ருச்சி சோயா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சமையல் எண்ணெயை, சுத்திகரிப்பு மற்றும் ‘பேக்கிங்’ செய்து கொடுக்க, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துடன், ருச்சி சோயா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வழங்கும் சமையல் எண்ணெய், எங்கள் நிறுவனத்தின், ராஜஸ்தான் மாநிலம், பரான் தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்பட்டு, பேக்கிங் செய்து தரப்படும். சோயா, சூரியகாந்தி, கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை அரைத்து, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் தயாரித்து வழங்கப்படும். இதன் மூலம், நிறுவனத்திடமுள்ள உற்பத்தித் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துடனான ஒப்பந்தம், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ருச்சி சோயா, இந்தியாவில், ஆண்டுக்கு, 33 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட, பெரிய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக உள்ளது. மேலும், விவசாயம் மற்றும் நுகர்பொருள் துறையில், 400 கோடி ரூபாய் விற்றுமுதலுடன் முன்னனியில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|