பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:27
பெங்களூரு : ‘நிடி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியதாவது: அமெரிக்காவின் சாப்ட்வேர் துறை வளர்ச்சிக்கு, ஏராளமான இந்தியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கப் போவதாக கூறி, ‘எச்1 பி’ விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.இது போன்ற நடவடிக்கைகள், அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும். இதை, டிரம்ப் வெகு விரைவில் உணருவார்.
அமெரிக்கா, தாராள வர்த்தகம் குறித்து, பல காலமாக பேசி வந்ததால் தான், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த, வல்லுனர்களை ஈர்க்க முடிந்தது. அதனால், அமெரிக்காவும், அதைச் சார்ந்த, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் வளமாயின. தான் வளரும் போது, தாராள வர்த்தகம் பற்றி பேசிய அமெரிக்கா, இதர நாடுகள் வளர நினைக்கையில், வர்த்தகத்திற்கு அணை போட முயற்சிப்பது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|