பதிவு செய்த நாள்
15 பிப்2017
08:29
புதுடில்லி : ‘‘சீனாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது,’’ என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில், சீனப் பொருட்கள் அதிகளவில் இறக்குமதியாகின்றன. ஆனால், அதே அளவிற்கு, இந்திய பொருட்கள், சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. இதற்கு, ஏற்றுமதியாகும் பொருட்கள், அவற்றின் விலை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, சீனா, தொலை தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த, அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை, அதிகளவில் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து, சீனாவுக்கு இரும்புத் தாது, பருத்தி போன்ற மூலப் பொருட்கள், இடைநிலை பொருட்கள் தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. இதனால், இந்தியா – சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், சமச்சீரின்றி உள்ளது. இத்தகைய போக்கை மாற்றி, சீனாவுக்கு அதிகளவில் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, இந்திய முயற்சி மேற்கொண்டு உள்ளது.
இது குறித்து, சக்திகாந்த தாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த, 2016ல், இந்தியா – சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 7,100 கோடி டாலராக இருந்தது. இதில், நம் ஏற்றுமதி, சீனாவுக்கு நிகராக இல்லாததால், இந்தியாவின் வர்த்தகத்தில், 4,600 கோடி டாலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு நீடித்து, நிலையாக இருக்க வேண்டுமென்றால், பரஸ்பர வர்த்தகம், சமமாக இருக்க வேண்டும்.அதனால், சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரித்து, வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|