சீனா­வுக்கு ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க இந்­தியா முயற்சிசீனா­வுக்கு ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க இந்­தியா முயற்சி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.95 ...
காதி தொழில் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு மத்­திய அரசு ரூ.340 கோடி ஒதுக்­கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2017
08:29

புது­டில்லி : மத்­திய அரசு, அடுத்த மூன்று ஆண்­டு ­களில், காதி மற்றும் கைவினைப் பொருட்­களின் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையை, 20 சத­வீதம் உயர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, 2017 – 18ம் நிதி­யாண்டில், இரு திட்­டங்­களின் கீழ், 340 கோடி ரூபாய் ஒதுக்க, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் அமைச்­சகம் முடிவு செய்­துள்­ளது.
இது குறித்து, அமைச்­சக உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: வரும் நிதி­யாண்டில், காதி கிரா­மத்யோக் துறையின் வளர்ச்­சிக்கு, ‘காதி பிளாசா’ மற்றும் ‘சீர­மைக்­கப்­பட்ட சந்தை மேம்­பாட்டு உதவி திட்டம்’ என, இரு திட்­டங்கள் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளன. இதற்­காக, 340 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது; அதில், காதி பிளாசா திட்­டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் முத­லீட்டில், காதி பொருட்­க­ளுக்­கான வணிக வளா­கங்கள் அமைக்­கப்­படும். காதி துறையை மேம்­ப­டுத்தும் திட்­டங்கள் மூலம், கைவி­னை­ஞர்­களின் ஊதியம் உயரும்; 1,500க்கும் அதி­க­மான, காதி கிரா­மத்யோக் நிறு­வ­னங்கள் பயன் பெறும். மத்­திய பட்­ஜெட்டில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் துறை மேம்­பாட்­டிற்­காக, 6,482 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது; அதில், கடன் உறுதி திட்­டத்­திற்கு, 3,002 கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும். இத்­தொகை, 4.68 லட்சம் கடன் திட்­டங்­க­ளுக்கும், 17,955 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, கடன் உத்­த­ர­வாத திட்­டத்­திற்கும் பயன்­ப­டுத்­தப்­படும். பிணை­யின்றி கடன் பெற்று, திரும்பச் செலுத்த இய­லாத, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் கடன் சுமை குறைக்­கப்­படும். இந்­நி­று­வ­னங்­களின் கடன் தொகையில், 50 – 85 சத­வீதம், கடன் உத்­த­ர­வாத திட்டம் மூலம், கடன் வழங்­கிய நிறு­வ­னங்­க­ளுக்கு அளிக்­கப்­படும்.
இது­த­விர, பிர­தமர் வேலை உற்­பத்தி திட்­டத்தின் கீழ், 4.52 லட்சம் பேருக்கு வேலை­வாய்ப்பு வழங்கும் வகையில், 1,024 கோடி ரூபாய் ஒதுக்­கீட்டில், 56,500 குறு நிறு­வ­னங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.மேலும், பயிற்சி பெற்ற வல்­லு­னர்­களை அதி­க­ளவில் உரு­வாக்கும் நோக்கில், தொழில்­நுட்ப மையங்­க­ளுக்கு, 105 கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும். இதன் மூலம், 1,99,500 பேருக்கு தொழிற்­ப­யிற்சி அளிக்­கப்­படும். இதனால், 40 ஆயிரம் நிறு­வ­னங்கள் பயன் அடையும். கடன் சார்ந்த மூல­தன மானிய திட்­டத்­திற்கு, 451 கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும். இதன் மூலம், 6,700 குறு மற்றும் சிறு நிறு­வ­னங்கள் பயன் பெறும். அவற்றின் உற்­பத்தி, விற்­பனை, விற்­று­முதல் ஆகி­யவை உயரும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)