பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:03
மும்பை : பேங்க் ஆப் பரோடா, 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9.39 லட்சம் கோடி ரூபாயை, மொத்த வணிகமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 9.73 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. அதில், வங்கி திரட்டிய டிபாசிட், 5.89 லட்சம் கோடி ரூபாய்; வழங்கிய கடன்கள், 3.49 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
கடந்த மூன்றாவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம், 253 கோடி ரூபாயாக உள்ளது. இதே காலத்தில், வங்கியின் மொத்த வருவாய், 12 ஆயிரத்து, 181 கோடி ரூபாய்; நிகர வட்டி வருவாய், 3,134 கோடி ரூபாய்; இதர வருவாய், 1,775 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஒன்பது மாதங்களில், பேங்க் ஆப் பரோடாவின் மொத்த வருவாய், 36 ஆயிரத்து, 106 கோடி ரூபாய்; வட்டி வருவாய், 31 ஆயிரத்து, 325 கோடி ரூபாய்; இதர வருவாய், 4,781 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|