பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:04
பெங்களூரு : பொதுத் துறையைச் சேர்ந்த, எச்.ஏ.எல்., எனப்படும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பெங்களூரில் மூடப்பட்டுள்ள, அதன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், டி.சுவர்ன ராஜூ கூறியதாவது:எச்.ஏ.எல்., விமான நிலையம், ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்பட்டு, சில விமான சேவைகளை மேற்கொள்ளும். மத்திய அரசு, பிராந்திய இணைப்பு கொள்கையை வெளியிட்ட போது, இந்த விமான நிலையம், பட்டியலில் இடம் பெறவில்லை. அதனால், பட்டியலில் சேர்க்க, விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து உள்ளோம். அத்துடன், பிராந்திய இணைப்பு சேவைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் கோரியுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்கு வரத்தை, எச்.ஏ.எல்., விமான நிலையம் கையாண்டு வந்தது. தேவனஹல்லியில், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைந்ததை அடுத்து, 2008ல், எச்.ஏ.எல்., விமான நிலையம் மூடப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|