பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:06
புதுடில்லி : ‘பெரும்பான்மையான பெரிய நிறுவனங்களிடம், சமூக பொறுப்புணர்வு அதிகரித்து வருகிறது’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ஆக்ஸ்பம் இந்தியா நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு குறித்து, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: பெரிய நிறுவனங்களுக்கு, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் உள்ள அக்கறை தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, முன்னணியில் உள்ள, 100 நிறுவனங்கள், இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. பணிச் சூழலில் பாரபட்சமற்ற அணுகுமுறை; பணியாளர்களை கண்ணியமாக நடத்துவது மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது; சமூக மேம்பாட்டில் அக்கறை; மக்களுடன் இணைந்து செயல்படுதல்; வர்த்தகத்தில் சமூகத்தினரின் பங்களிப்பு ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மேற்கண்ட அனைத்து பிரிவுகளிலும், நிறுவனங்களின் செயல்பாடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் கண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், வர்த்தகத்தில், சமூகத்தினருக்கான பங்களிப்பில், 92 நிறுவனங்கள், மிகவும் பின்தங்கி உள்ளன.
எனினும், ஒட்டுமொத்த அளவில், பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டுள்ளது. இருந்த போதிலும், அவை, மேலும் அதிகஅளவில், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதற்கான களவாய்ப்பு அதிகமாக உள்ளது. அதை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|